நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்ட..
கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள்
அப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் இந்த இவள்
96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்குறுநாவல்..
தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படு..
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார்...
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு..
சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது.
ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்..
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அம..
நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளை தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையரைகளால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா. பெண்ணுடலையும் அதன் ரகசிய வ..
எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக்..
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன. நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்கு..
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிச் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக..
இந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம..
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி'
படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் ..
மதுரை தமிழ் நாடக மய்யத்தின் குதிரை முட்டை நாடகம் குறித்த இந்த நூல் அத்தகைய அரிதான பதிவு. சுகுமாரன், சே.இராமானுஜம், அ.ராமசாமி, பி.ஏ.கிருஷ்ணன், பிரேம், பெருமாள்முருகன் போன்றவர்களின் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு...
நவீனத் தமிழ் உரைநடைக்கு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமி..